search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் கொலை"

    • 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சுனு-சவுமியா தம்பதியரின் ஒரு குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததும், அதற்காக தான் சவுமியா வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தாளவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட சக்குளம் மூலேபரம்பு பகுதியை சேர்ந்தவர் சுனு. இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு ஆதி மற்றும் ஆதில் (வயது 3) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

    வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த சவுமியா, சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இன்று காலை அவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

    அப்போது அங்கு சுனு அவரது மனைவி சவுமியாவுடன் தூக்கில் தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கணவன்-மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதும் மற்றொரு அறையில் 2 குழந்தைகள் பிணமாக கிடப்பதும் தெரியவந்தது.

    4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சுனு-சவுமியா தம்பதியரின் ஒரு குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததும், அதற்காக தான் சவுமியா வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    எனவே 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, சுனு-சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
    • தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன், விவசாயி. இவரது மனைவி பாண்டீஸ்வரி(வயது35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி (16), காளீஸ்வரி(11) என்ற 2 மகள்களும், 1 வயதில் விக்னேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இதில் வைத்தீஸ்வரி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கடும் அவதியடைந்தார். பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதன் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது மனைவி பாண்டீஸ்வரி மற்றும் மகள்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    ஈஸ்வரனின் இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்கள் இறுதி சடங்குகளை முடித்து விட்டு சென்றபின் வீட்டில் பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக இருந்தார். கணவர் இறந்தபின் வாழ விருப்பமில்லாத அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டதாக தெரிகிறது.

    தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று இரவு கோட்டையூரில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு மகள்கள் மற்றும் மகனை அழைத்துச் சென்ற பாண்டீஸ்வரி அங்குள்ள கிணற்றில் முதலில் 2 மகள்களை தள்ளிவிட்டும், பின்னர் மகனை கிணற்றில் போட்டும் கொன்றார். அதன் பின் அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.

    இன்று காலை வீட்டில் பாண்டீஸ்வரி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.

    ஒரே கிணற்றில் 4 பேர் இறந்து கிடப்பது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவர் இறந்த 3 நாளில் தனது 2 மகள்கள், மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் சுப்ரமணியம் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    • லாவண்யா இதற்கு மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு அடுத்த திகுவபல்லியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (வயது 24). தம்பதியின் மகன் பரமேஸ்வர ரெட்டி (4), மகள் மோஷிதா (2).

    இவர்கள் மதனப்பள்ளி அடுத்த குர்ரம் கொண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

    சுப்ரமணியம் ரெட்டி அங்குள்ள மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியம்ரெட்டி நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இங்கிருந்து வரமாட்டேன் என்கிறாய் என லாவண்யாவை சரமாரியாக தாக்கினார்.

    இதையடுத்து லாவண்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பூதலப்பட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறால் லாவண்யா மனம் உடைந்தார். நேற்று தனது குழந்தைகளுடன் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து உயிருக்கு போராடினார்.

    கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் அப்பகுதி மக்களால் அவர்களை மீட்க முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர்.

    இது குறித்து குர்ரம் கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×